குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு குடியுரிமை
தாய்லாந்தில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளருக்கு அந்நாட்டு அரசு குடியுரிமையை வழங்கியுள்ளது.
தாய்லாந்தில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளருக்கு அந்நாட்டு அரசு குடியுரிமையை வழங்கியுள்ளது. தாய்லாந்தில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி குகையில் இருந்து சிறுவர்கள் 12 பேர், அவர்களின் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர், 18 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.
அவர்களில் பயிற்சியாளரும், மூன்று சிறுவர்களும் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்த அகதிகள் என்பதால், அவர்களுக்கு சியாங்ராய் நகரில் குடியுரிமம் வழங்கப்பட்டது. குடியுரிமம் பெறுவதற்கான தகுதி அடிப்படையில் குடியுரிமம் வழங்கப்பட்டதே தவிர குகை சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என தாய்லாந்து அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story