38 ஆண்டுகளில் இல்லாத கன மழை - 6 பேர் பலி
தொடர் கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
கனமழை - வெள்ளம் - நிலச்சரிவு
சீனாவின் ஷான்சி பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஓடும் வெள்ளத்தின் காரணமாக வாகனங்கள் ஊர்ந்தவாறு செல்கின்றனர். மேலும் சில பகுதிகளில் மழையின் காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
மழைக்கு இதுவரை 6 பேர் பலி
பாகிஸ்தானின் லாகூரில் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இது வரை 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். லாகூரில் 38 ஆண்டுகளில் இல்லாத அளாவிற்கு 214 மில்லிமீட்டராக மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story