திருமணமான இளம் பெண் விபரீத முடிவு - போராட்டத்தில் குதித்த உறவினர்கள்..

x

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வடகரை தெருவை சேர்ந்தவர் அபிநயா. இவருக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், இரண்டரை வயதில் ஆண் குழந்தை ஒருவர் உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அபிநயா, திடீரென தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பெண்ணின் உடலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உறவினர்கள், தற்கொலையில் மர்மம் இருப்பதையும், போலீசார் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டி, திண்டிவனம் அரசு மருத்துவமனையிலே பிரேத பரிசோதனை செய்ய வற்புறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்