வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது - அதிமுக கொடுத்த பரபரப்பு மனு

x

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது - அதிமுக கொடுத்த பரபரப்பு மனு

விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு அளித்தார். விழுப்புரம் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ந மனு அளித்தார்..


Next Story

மேலும் செய்திகள்