வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றம்... திரளும் பக்தர்கள்.. | Velankanni

x

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது

செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை கொண்டாட, வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். இந்நிலையில், திருவிழாவையொட்டி 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பேராலய அதிபர் இருதயராஜ் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்