நேருக்கு நேர் மோதிய வேன்-பைக்...சம்பவ இடத்திலேயே பலியான உயிர் - தஞ்சையை உலுக்கிய விபத்து

x

தஞ்சை அருகே வேன்-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் பலியானார். திருவாரூர் மாவட்டம் கூத்தாடிமூலை கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரன், திருப்பூரில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊர் வந்தவர், இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு புறப்பட்டுள்ளார். அப்போது தஞ்சை அருகே காட்டூர் பகுதியை கடந்த போது, நாகை நோக்கி சென்ற வேன் இருசக்கரவாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பரமேஸ்வரன் நிகழ்விடத்திலேயே பலியானார்.


Next Story

மேலும் செய்திகள்