பிரசாரம் முடிந்ததும் வெடித்த மோதல்..கட்சியினர் இருவருக்கு கத்திக்குத்து - திருச்சியில் பயங்கரம்

x

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொடியை அகற்றுவது தொடர்பாக திமுக-அதிமுகவினரிடையே ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது. பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பூவாளூரில் காங்கிரஸ் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரம் முடிந்ததும் அதே பகுதியை சேர்ந்த அதிமுகவினர் கொடி மற்றும் பிளக்ஸ் பேனர்களை அகற்றுமாறு திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மோதலாக வெடித்து, திமுகவினர் கத்தியால் குத்தியதில் செந்தில்குமார், பாஸ்கர் ஆகியோ படுகாயமடைந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்