மின்கம்பத்தில் பழுது பார்த்தவருக்கு நேர்ந்த சோகம் - முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

x

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடிஅம்பேக்தர் நகரில் வசித்து வந்த முருகன், மின்கம்பத்தில் பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். முருகனின் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவருடைய குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்