"அதிக வீட்டுப்பாடங்கள்... தாங்காத அழுத்தம்..." மாணவன் எடுத்த விபரீத முடிவு கதறும் பெற்றோர்

x

சேலத்தில் அதிக வீட்டுப்பாடங்கள் காரணமாக, 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த மதன்கிருஷ்ணன் என்பவரது மகன் சாரதி. மரவனேரியில் உள்ள பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்த அவருக்கு, ஆசிரியர்கள் அதிக வீட்டுப்பாடங்கள் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவற்றை சரியாக எழுதாமலும் படிக்காமலும் இருந்த சாரதியை, ஆசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தங்களது மகனின் தற்கொலைக்கு ஆசிரியர்களே காரணம் என, சாரதியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் இனி நிகழாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்