"சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்" - கோரிக்கை வைத்த பள்ளி மாணவன்

x

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று 8-ஆம் வகுப்பு மாணவர் கோரிக்கை விடுத்தார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் நேரடியாக திறந்து விடப்படுவதாகவும், இதனால் குடிநீர் மாசடைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாகவும் முறையிட்டார். எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நல்ல குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்