"இதன் மூலமே தேர்ந்தெடுக்க வேண்டும்.." அரசுக்கு ராமதாஸ் திடீர் கோரிக்கை

x

உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தை டி.என்.பி.எஸ்.சி.

தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு, பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1933 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். டி.என்.பிஎஸ்.சி மூலம் நடத்தப்பட வேண்டிய ஆள்தேர்வை நகராட்சி நிர்வாகத் துறை நேரடியாக நடத்தத் துடிப்பதன் பின்னணியில் ஊழல் சதி இருக்குமோ? என்ற ஐயம் எழுவதாக அவர் கூறியுள்ளார். தற்போதைய அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்