மது போதையில் இளைஞர் கோவிலில்...செய்த சம்பவம்...கடும் அதிர்ச்சியில் நின்ற மக்கள்

x

திருப்பூர் அருகே, மதுபோதையில் கோவிலில் இருந்து கலசத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்குளி சாலை அருகே உள்ள ஆவடி நாயகி அய்யனார் கோவிலில் இருந்து இரண்டரை அடி கலசம் மாயமானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இளைஞர் ஒருவர் கலசத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து பல்லடம் பகுதியை சேர்ந்த யுகேந்திர பிரசாத் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கலசத்தையும் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்