"சுனாமி, நடுங்க விட்ட தங்கம் விலை.." - கனவில் வந்து கடவுள் போட்ட உத்தரவு

x

வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக சிவன்மலை ஆண்டவர் கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. சுப்பிரமணிய சுவாமியே பக்தர்களின் கனவில் தோன்றி, குறிப்பிட்ட பொருளை உத்தரவுப் பெட்டியில் வைக்குமாறு உத்தரவிடுவார் என நம்பப்படுகிறது. அவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி முதல், சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த மகாராஜா என்பவரின் கனவில் தோன்றிய நிறைபடி நெல், உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தாராபுரம் நாச்சிமுத்துப்புதூர் பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவரின் கனவில் உத்தரவுப் பொருளாக வேல் வந்துள்ளது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. ஏற்கனவே 2019 மார்ச் 5ந் தேதியும், 2022 அக்டோபர் 6ந் தேதியும், தொடர்ந்து 2023 பிப்ரவரி 28ந் தேதியும் சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்