மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் சைக்கிள் .. தலைமை ஆசிரியரின் பலே ஐடியா

x

அரசு பள்ளியில், பழுதான சைக்கிள்களை கொடுத்தால் பிரச்சினை வரும் என்பதற்காக, தலைமையாசிரியர் குலுங்கல் முறையில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நாத்தம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஜோலார்பேட்டை எம்எல்ஏ பங்கேற்று, ஒரு சில மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டுச் சென்றார். மாணவர்களுக்கு வழங்குவதற்காக வந்திருந்த 89 மிதி வண்டிகளில், பழுதடைந்த வண்டிகளும் இருந்ததாக தெரிகிறது. இதனை மாணவர்களுக்கு வழங்கினால் பிரச்சினை வரும் என்பதற்காக, தலைமையாசிரியர், குலுக்கல் முறையில் சைக்கிள்களை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்