"ரூ. 37 லட்சம் அபராதம்" - அதிரடி காட்டிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

x

Thoothukudi

நீர் நிலைகளில் காற்றாலை மின் கம்பங்கள் நிறுவப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது...

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் உரிய அனுமதியின்றி நீர்நிலைகளில் காற்றாலை மின் கம்பங்கள் நிறுவப்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டுமெனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து நிறுவப்பட்ட 84 காற்றாலை மின் கம்பங்களுக்கு தலா 45 ஆயிரம் ரூபாய் வீதம் 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அபராத தொகையை விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் கிராமங்களில் உள்ள குளங்களை தூர்வார பயன்படுத்த வேண்டுமெனக் கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்