அம்மன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யம் திருட்டு.. பக்தி பெண்ணின் பகீர் செயல்

x

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 3 கோயில்களில் அம்மன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தைத் திருடிச் சென்ற மர்ம பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மாவடிக்கால் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் அருகிலேயே கங்கை அம்மன் கோயிலும் உள்ளது... சங்கரன்கோவிலில் இருந்து தனியார் பேருந்தில் வந்த மர்ம பெண், யாரும் இல்லாத நேரம் பார்த்து காளியம்மன் கோயிலிலும், தொடர்ந்து கங்கை அம்மன் கோயிலிலும் அம்மன் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தைத் திருடியுள்ளார்... திருடப்பட்ட மாங்கல்யத்தின் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய் ஆகும். அதேபோல், கடந்த ஞாயிறன்று முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோயிலிலும், அம்மன் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை மர்ம பெண் திருடியுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் திருடிய பெண்ணைத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்