தந்தையின் நெஞ்சில் சதக் சதக்கென குத்திய மகன் - நாமக்கல்லில் பரபரப்பு

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டதால், தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராசிபுரம் அடுத்த வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர், திருமணமாகி வேலைக்கு செல்லாமல் இருந்த தனது மகன் திருமலைவாசனை கண்டித்து வந்துள்ளார். சம்பவத்தன்றும், திருமுலைவாசன் மது அருந்தி வந்ததால் ஆத்திரமடைந்த முதியவர், மகனை தட்டிக்கேட்ட போது, அவரின் மார்பில் கத்தியால் குத்தி விட்டு திருமலைவாசன் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தலைமறைவாக உள்ள திருமலை வாசனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்