கொள்ளையடிக்க மாஸ்டர் பிளான்.. ஜன்னலை உடைத்த நொடி எதிரே நின்ற காவலாளி..

x

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறு மொளசி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், இரவில் வந்த மர்ம நபர், அங்கிருந்த காவலாளி சுந்தரத்தை கட்டையால் தாக்கிவிட்டு, பூட்டை உடைத்து உள்ளே சென்று ஜன்னல் கதவுகளை உடைத்துப் பார்த்துள்ளார். எதையும் திருட முடியாததால் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், காயமடைந்த காவலாளி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளை முயற்சி தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்