வாடகை கார் எடுத்து மனைவியை கடத்திய கணவன் - கார் ஓட்டுனரை துடிதுடிக்க கொன்ற கொடூரம்

x

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே நிலையம் அருகே, அத்திக்குளம் கண்மாய் கரையில், அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில், மதுரையை சேர்ந்த கார் ஓட்டுனர் முருகன் என தெரியவந்தது. மேலும், மதுரையில் டிராவல்ஸ் நடத்தி வரும் பால் பாண்டி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அடையாளம் தெரியாத 3 பேர் வாடகைக்கு கார் கேட்டதாகவும், அப்போது, கார் உரிமையாளரான பால்பாண்டி, ஓட்டுநர் முருகனுடன் அந்த 3 பேரை அனுப்பி வைத்ததாகவும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த 3 பேரை போலீசார் தேடி வரும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த மகளை, வீட்டிலிருந்து அவரது கணவர் அசாருதீன் சம்பந்தப்ட்ட காரில் கடத்திச் சென்றதாக அவர் தாய் அளித்தார். அதன் பேரில் அசாருதீன் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்