தமிழக அரசு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் | TN GOVT

x

அரசு ஊழியர்களின் சொத்து பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு துறைகளில் ஊழலை தடுக்கும் விதமாக அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை ஆண்டு தோறும் வெளியிட உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், 5 ஆண்டுக்கு ஒருமுறை ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்கின்றனர். ஆனால், அதை இணையத்தில் வெளியிடுவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்