மேயரை புறக்கணித்த கவுன்சிலர்கள்... நெல்லையில் சலசலப்பு

x

சுதந்திர தின நிகழ்ச்சி நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய கீதம் பாடும் வரை காத்திருந்த மாமன்ற உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் அவர் பேசத் துவங்கியவுடன் இடத்தை காலி செய்து வெளியே சென்றனர்.

ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மேயர் அதே கட்சியை சார்ந்த கவுன்சிலர்கள் இடையேயான மோதல் சுதந்திர தின விழாவிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்