தூய்மை பணியாளருக்கு நேர்ந்த கொடூரம்.. அனாதையாக தவிக்கும் 3 குழந்தைகள் - தூத்துக்குடியில் துடிக்க, துடிக்க பயங்கரம்

x

தூத்துக்குடியில், தூய்மைப் பணிக்கு சென்ற பெண்ணை, மர்மநபர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மஞ்ச நீர் காயல் பகுதியை சேர்ந்த கனகா என்பவர், கணவரை இழந்த நிலையில், தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த கனகாவுக்கு, ஆண் நபர் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் பணிக்கு சென்ற கனகா, திருச்செந்தூர் சாலையில் பேருந்தில் இருந்து இறங்கியபோது, அங்கு பதுங்கியிருந்த மர்மநபர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்