நெல்லையை உலுக்கிய ஆண் சடலம் - கூறுபோட்ட பயங்கரம்

x

நெல்லை சந்திப்பு பாபுஜி முத்து நகர் பகுதியில், ஆண் ஒருவர் வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த நபரின் சட்டைப் பையில் கிடந்த கார் சாவியை மீட்டனர். பின்னர் அந்த சாவியை வைத்து விசாரணை செய்ததில், உயிரிழந்தவருக்கு சொந்தமான கார் அருகில் இருப்பது தெரியவந்தது. காரில் இருந்த ஆவணங்களை போலீசார் சோதனை செய்ததில், இறந்து கிடந்தவர் விருதுநகரைச் சேர்ந்த காளிராஜ் என தெரியவந்தது. ரியல் எஸ்டேட் முகவரான காளிராஜ், இடம் பார்ப்பது தொடர்பாக வந்தபோது, அவரை 2 பேரை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்