ஊருக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய கரடி... நெல்லை அருகே அச்சத்தில் மக்கள்

x

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில், ஊருக்குள் புகுந்த கரடியால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ரம்ஜான் நோன்புக்காக சென்ற மக்கள், கரடியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விரட்டியுள்ளனர். தொடர்ந்து தெருக்களில் ஓடிய கரடி, ஒரு பெண்ணை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது. காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து விரைந்த வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரடி ஊருக்குள் உலாவும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்