"பேங்க் மேனேஜரின் தொடர் பாலியல் டார்ச்சர்?" ...கூலிப்படை வைத்து வெட்டிய அசிஸ்டன்ட் மேனேஜர்

x

"பேங்க் மேனேஜரின் தொடர் பாலியல் டார்ச்சர்?" கூலிப்படை வைத்து வெட்டிய அசிஸ்டன்ட் மேனேஜர்

நாமக்கல் நகர், ரெங்கர் சன்னதியில் உள்ள தனியார் வங்கியில், உதவி மேலாளராக பணியாற்றுபவர் காவ்யா. இவர், அதே வங்கியில் மேலாளராக உள்ள கோபிநாத்தை கூலிப்படை வைத்து கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக 4 பேருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்த நிலையில், அவர்கள் கோபிநாத்தை அரிவாளால் தாக்கி விட்டு சென்றனர். கோபிநாத் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கூலிப்படை மற்றும் காவ்யா போலீசாரிடம் பிடிபட்டனர். இதுகுறித்து, காவ்யாவிடம் விசாரிக்கையில், மேலாளர் கோபிநாத், தனக்கு அதிக வேலைப்பளு மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததால் இவ்வாறு செய்தேன் என ஒப்புக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்