மர்ம கொள்ளையில் வடமாநில இளைஞர்கள்...வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், பிரபல துணிக்கடை மற்றும் செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், கொள்ளையில் ஈடுபட்டது வட மாநில இளைஞர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்செங்கோட்டின் முக்கிய சாலையில் அமைந்துள்ள இரு கடைகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்திய போலீசார், முதற்கட்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள் என தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்