திருமணம் செய்து வைக்காத ஆத்திரம்... தந்தைக்கு எமனாக மாறிய மகன்... கண்முன் துடித்து நின்ற உயிர்

x

பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டையை சேர்ந்தவர் மணிமாறன். துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்ற அவர், அங்கு போதிய சம்பளம் வழங்காததால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்காதது குறித்து தந்தை சுப்பிரமணியிடம் மணிமாறன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் முற்றவே, அருகிலிருந்த அரிவாளை எடுத்து சுப்பிரமணியனை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிமாறனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்