அடையாளம் தெரியாத சடலங்கள்...2 மகள்களுடன் தாய் அரங்கேற்றிய விபரீதம் - தஞ்சையை உலுக்கிய சம்பவம்

x

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டனர்.

உத்தாணி ரயில்வே கேட் குடமுற்று ஆற்றுப்பாலம் அருகில், செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை சென்ற விரைவு ரயிலில் 40 வயது தக்க தாய் தன்னுடைய, 10 வயது,மற்றும் 9 வயது உள்ள இரண்டு பெண் குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இறந்தவர்கள் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை. இதுகுறித்து அன்னுகுடி கிராம நிர்வாக அலுவலர் போலீசார், உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனையில் அனுமதித்தனர். இறந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்