நடுரோட்டில் ரூ.10 மிளகாய் பொடி தூவி.. 7 கிலோ நகைகளை கொள்ளையடித்த நபர்கள்.. தட்டி தூக்கிய போலீஸ்..

x

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகளான கர்த்தாராமும் ஆசுராமும், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு, வெள்ளி நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். அந்தவகையில் அண்மையில் இருவரும், 7 கிலோ வெள்ளி நகைகளோடு தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மர்மநபர்கள், இருவர் மீதும் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். பின்னர் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டி, நகைகளை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட 16 வயது சிறார் உட்பட 5 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து ஐந்தரை கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்