விசிக நிர்வாகி மீதான மோகம்..மகளை பாலியல் தொழிலாளியாக்கி இரையாக்க போராடிய கொடூர தாய்

x

தகாத உறவு காதலனுடன் சேர்ந்து, பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்... மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் இசக்கிமுத்து. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இவர், சங்கரன் கோவிலை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அப்பெண்ணின் மகளான இளம் சிறுமிக்கு.. இசக்கி முத்து பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்த நிலையில், சிறுமியின் தாய் உதவியுடனே அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் மற்றும் அவரின் தகாத உறவின் காதலனின் சித்ரவதைகளுக்கு ஆளாகி தவித்து வந்த சிறுமி, தன் உறவினர்கள் மூலம் போலீசில் புகாரளித்துள்ளார். இந்நிலையில், தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், சிறுமியின் தாய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இசக்கி முத்து ஆகியோர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்