பஞ்சர் ஒட்டும் நேரத்தில்..பாய்ந்த கார்..ரோட்டில் நடந்த கோரம்

x

அரியானா மாநிலத்தில் டயர் பஞ்சராகி நின்ற காரின் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில், 6 பேர் பலியாகினர்.

ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு, காரில் ஒரு குழு வீடு திரும்பிக் கொண்டிருந்தது. அரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள மாசானி கிராமம் அருகே வந்த போது, காரின் டயர் பஞ்சரானது. இதையடுத்து, காரை நிறுத்தி, டயர் மாற்றிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு கார், அவர்கள் மீது மோதியது .இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 2 பேர் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்