"திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் கருவறை - அருகே இப்படியா செய்வது?"தீயாய் பரவும் வீடியோ..

x

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், பெண் அறங்காவலருடன், பெண் ஊழியர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற திருக்கோயிலான திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில், தற்போது குடமுழுக்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயிலின் பெண் அறங்காவலரான வளர்மதி என்பவர், பெண் ஊழியர்களுடன் சேர்ந்து கோயில் வளாகத்துக்குள் எடுத்த ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் கருவறை அருகே ஊழியர்கள் இவ்வாறு ரீல்ஸ்கள் எடுத்து பதிவிடுவதாக கூறி பொதுமக்களும், பக்தர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்