"மாணவன் சட்டையை கழற்றி.. கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.." அதிர்ந்த பெற்றோர் - சேலத்தில் அதிர்ச்சி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, அரசு பள்ளி ஆசிரியர் தாக்கியதால், காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஓமலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 6 மற்றும் 7ம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் வகுப்பறையை சுத்தம் செய்தபோது, சக மாணவனின் உணவை, மூத்த சகோதரன் தவறுதலாக கீழே கொட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை, இளைய சகோதரன் தட்டி கேட்டதுடன், தமது அண்ணனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வகுப்பு ஆசிரியர், இளைய சகோதரனை சட்டையை கழற்ற வைத்து, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஆசிரியர் மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்