தமிழர்களுக்காக மத்திய அரசு எடுத்த முயற்சி.. கிடைத்தது வெற்றி

x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம், காரைக்காலை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த மாதம் 13-ம் தேதி கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் பேச்சுவார்த்தைக்குப் பின் மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. விடுதலையான மீனவர்கள் கொழும்பு விமான நிலையத்திலி ருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கிருந்து 7 மீனவர்கள் ராமேஸ்வரத்திற்கும், 14 மீனவர்கள் காரைக்காலுக்கும் தனித்தனி வாகனங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்