திடீரென கோயிலை சூழ்ந்த வெள்ளம்... - பரபரப்பு காட்சிகள்

x

திடீரென கோயிலை சூழ்ந்த வெள்ளம்.. - பரபரப்பு காட்சிகள்

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு பூஜைகள் நிறுத்தப்பட்டன. மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளம், கோயிலை சூழ்ந்துள்ளது. தண்ணீர் புகாதபடி கோயில் உண்டியல்கள் பாலிதீன் பைகள் கொண்டு மூடப்பட்டன. வெள்ளம் திடீரென கூடுவதும், குறைவதுமாக இருப்பதால் வழக்கமாக கோயில் நடைமுறைகளை மேற்கொள்ள முடியவில்லை என அதிகாரிகள், அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்