பரவும் மர்ம காய்ச்சல் - தனிமைப்படுத்தப்பட்ட 40 பேர் | mettur

x

மேட்டூரில் 54 பயிற்சி காவலர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், 492 ஆண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணிகளுக்காக அருகிலுள்ள மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையில், 54 பயிற்சி காவலர்களுக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 14 பயிற்சி காவலர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 40 பேருக்கு, காவலர் பயிற்சி பள்ளி விடுதியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தனிமைப்படுத்தப்பட்ட 40 காவலர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கண் பாதிப்பு நோய் மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்