அதிர்ச்சியில் அமீர்.. "இது உண்மையானால் இனி வாய்ப்பே இல்ல" | Ameer Sultan | Zafar Sadiq

x

தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடன் தொடர்ந்து பணியாற்றப்போவதில்லை என இயக்குநர் அமீர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

9 ஆண்டுகளுக்குப்பிறகு இயக்குநர் அமீர், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்திய வழக்கில் சமீபத்தில் குற்றம்சாட்டப்பட்டார். இந்நிலையில், இயக்குநர் அமீர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்து வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பின், கட்டாயம் அது தண்டிக்கப்படவேண்டியது... சட்டவிரோதச் செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற மாட்டேன்... என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்