பாலியல் வழக்கு விவகாரம்..! முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு கடைசி வாய்ப்பு.. நீதிமன்றம் அதிரடி

x

பாலியல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி பூர்ணிமா விசாரித்தார். அப்போது தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் கோரிய ராஜேஷ் தாஸ் தரப்பு, வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி பூர்ணிமா, அவகாசம் கேட்டு ஏன் வழக்கை இழுத்தடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். வரும் 31ம் தேதி வாதாடவில்லை என்றால், பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்