பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வடமாநிலத்தவருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்

x

செய்யாறு அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்...

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே நடைபெற்ற வார சந்தையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநில நபர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட நபர் மீது தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்நபரை மீட்டுச் சென்றனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் செய்யாறு -ஆற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்