பள்ளி சிறுவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்திய அவலம்... அதிர்ந்த பெற்றோர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, பள்ளி வளாக தூய்மைப் பணியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்திய சம்பவம் பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனுப்பன்குளம் ஊராட்சிக்குட்பட்ட மீனம்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை, பள்ளி வளாக தூய்மைப் பணியில் ஈடுபட வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் இதனை தடுத்து நிறுத்தி, இதுபோன்ற தூய்மைப் பணிகளுக்கு அதற்குரிய தொழிலாளர்களை நியமிக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்