ரயில்கள் அட்டவணை மாற்றம் - தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு | Flood Damage | Southern Railway

x

கடந்த வாரம் பெய்த கனமழை வெள்ளத்தால், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே ரயில் பாதையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 1 முதல் 5 ஆம் தேதி 2 ரயில்கள் நெல்லை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பாலக்காடு - திருச்செந்தூர் இடையே செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை - திருச்செந்தூர் இடையே செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நெல்லை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்