உயிரிழந்தவர்களின் பெயரை வைத்து.. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மோசடி..

x

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள திருவள்ளியங்குடி ஊராட்சியை சேர்ந்தவர் சண்முகவடிவேல்.பிரதம மந்திரியின் ஆவாஸ் யோசனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட இவர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பம் அலைகழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சண்முகவடிவேல் பாதி வீட்டை கட்டி முடித்த நிலையில், விண்ணப்பம் தாமதமாவதற்கான காரணம் குறித்து விசாரித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்காத அதே கிராமத்தை சேர்ந்த பாண்டியன், தியாகராஜன் மற்றும் வினோத் என்பவரின் உயிரிழந்த தந்தை பெயரில் வீடு கட்ட அனுமதி வாங்கப்பட்டதும், அவர்களுக்கான பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து போன திருவள்ளியங்குடியை சேர்ந்த நால்வரின் பெயரில் இதே போல் வீடு கட்ட அனுமதி பெற்று, 2019-ல் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் தெரியவர, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரபட்ட நிலையில், உரிய விசாரணை நடத்தி 3 மாத கால அவகாசத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்