"வள்ளலாருக்கும் ஆளுநர் காவி கொடுத்தாலும் கொடுப்பார்" - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு

x

திருவள்ளுவருக்கு காவி உடை கொடுத்தது போல, வள்ளலாருக்கும் காவி உடையை ஆளுநர் கொடுத்தாலும் கொடுப்பார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, 24-ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 3-ஆம் தேதி வரை, தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்கள் ஆலோசனை நடத்தும் என்று கூறினார். திருவள்ளுவருக்கு காவி கொடுத்ததை போல், வள்ளலாருக்கும் ஆளுநர் காவி கொடுத்தாலும் கொடுப்பார் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்