பெரும் சிக்கலில் ரேஷன் விநியோகம்..ரூ.15கோடிக்கு ஆப்பு வைத்த வெள்ளம்..தூத்துக்குடி மக்களுக்கு பேரிடி

x

தூத்துக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக் கழகம் அமைந்துள்ளது. இங்கு தென் மாவட்டங்களில் அமைந்துள்ள நியாய விலை கடைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் 10க்கும் மேற்பட்ட குடோனில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கனமழை காரணமாக உருவான வெள்ளத்தில் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் கோதுமை மூடைகள் மழைநீரில் சேதம் அடைந்துள்ளது. இதில் சுமார் 15 கோடி மதிப்பிலான ஆறு ஆயிரம் டன் அரிசி, 500 டன் கோதுமை சேதம் அடைந்தன. இதனால் ரேஷன் கடைகளுக்கான அரிசி, கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்