"இந்தா அடி...பிடி.." குழந்தை முதல் பெரியவர்கள் வரை... சாட்டையால் அடித்த பூசாரி... கிறுகிறுக்க வைத்த வேண்டுதல்

x

ராசிபுரத்தை அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோயிலில் சாட்டையால் அடி வாங்கி பக்தர்கள் வினோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சீராப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பூச்சட்டி எடுக்கும் நிகழ்வு நேற்றிரவு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவராக பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். இந்த வினோத நிகழ்வு பல ஆண்டுகாலமாக நடந்துவருவதாகவும் சாட்டையால் அடிவாங்கினால் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்