ராமேஸ்வரம் கோயில் வெளியே சுத்தம் செய்த ஆளுநர்

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நாள் ஆன்மிக சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் வந்தார். திருப்பல்லாணி ஆதி ஜெகநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த அவர், அங்குள்ள கோமடத்துக்குச் சென்று, பசுவுக்கு தீவனம் மற்றும் புல் கொடுத்தார். பின்னர், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம் சென்ற ஆளுநருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி அங்குள்ள பதஞ்சலி முனிவர் நினைவிடத்தில் தரையில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார். பின்னர் ஆளுநரும் அவரது துணைவியாரும் கோயிலுக்கு வெளியே தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்