நெய் தீபம் ஏற்றி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த யோகி பாபு

x

பரமக்குடியில் அமைந்துள்ள சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். யோகி பாபு நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதற்காக பரமக்குடியில் உள்ள தனியார் விடுதியில் யோகிபாபு தங்கி உள்ளார். இந்த நிலையில் இன்று மாசி மாத பவுர்ணமியை ஒட்டி பரமக்குடியில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நெய் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் கோயில் வாசலில் இருந்த பசுமாட்டிற்கு வாழைப்பழம் வழங்கி வணங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்