ஆய்வு சென்ற அதிகாரிகள்; கடலில் தள்ளிய கொடூரம் - புதுகை அருகே பெரும் பரபரப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டை பட்டிணம் கடல் பகுதியில் அரிவலை மற்றும் மிக்சர் வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்துள்ளனர். இது தொடர்பாக பொன்னகரம் மீன்வளத்துறை அதிகாரிக்கு தகவல் தரப்பட்டது. சரக ஆய்வாளர் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் இரண்டு நாட்டு படகுகளில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கோட்டைபட்டிணம் மீனவர்கள் அதிகாரிகள் வந்த படகின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அதிகாரி கனகராஜ் கடலில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில், மற்றொரு படகில் வந்த மீனவர்கள் அவரை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பொன்னகரம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தற்போதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்