பேருந்து நிலையத்தில் பிஸ்கட்களுடன் நின்ற பெண்.. உடனே கைது செய்த போலீஸ்.. பழனியில் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோயிலுக்கு விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில், விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, முறையான அனுமதி பெற்று விடுதிகள் செயல்படுகின்றனவா என போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முறையான அனுமதி பெறாத விடுதியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், பாலியல் தொழில் நடைபெறுகிறதா என சோதனையிட்டனர். இதனிடையே பழனி பேருந்துநிலையத்தில் சோதனையின் போது மயக்க மருந்து கலந்த பிஸ்கட்களுடன் இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்