உடல் நலக்குறைவால் அறுவை சிகிச்சை..மறுநாள் பரிதாபமாக பிரிந்த உயிர்-கொதித்தெழுந்த உறவினர்கள் போராட்டம்

x

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், வீரகரன் என்ற 23 வயது பட்டதாரி இளைஞர், ஒட்டுக்குடல் பாதிப்பு காரணமாக, கடந்த 31ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 1-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், வீரகரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இதற்கு காரணம் எனக் குற்றம் சாட்டினர். மேலும், இளைஞரின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்